யாழ். தொலைக்காட்சி ஊடகவியலாளரிடம் ரிஐடியினர் விசாரணை!

யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இயங்கும் தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளரான புலேந்திரன் சுலக்ஷன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று கொழும்பிற்கு அழைக்கப்பட்ட அவர், விசாரணை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். புலம்பெயர் நாட்டில் வசிக்கும் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர் என கருதப்படும் நபருடன் ஊடகவியலாளர் முகநூல் நட்பில் இருந்தமை தொடர்பில்லையே விசாரணைக்கு அழைக்கப்பட்டு சுமார் மூன்று மணிநேர விசாரணை செய்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!