நாட்டில் நிலவும் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்..!

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 183 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆயிரத்து 564 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும், 228 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளதையடுத்து, கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆயிரத்து 272 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், தொடர்ந்தும் 2 ஆயிரத்து 697 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், மேலும் இரு உயிரிழப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்க 595 ஆக உயர்வடைந்துள்ளது.

வவுனியா பகுதியைச்சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரும், பதுளை யாழ்வெல பகுதியைச்சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!