எஸ்.பி. டிலான், அனுரவுக்கு விரைவில் அமைச்சர் பதவிகள்!

பிலவ புத்தாண்டுக்குப் பின்னர், அமைச்சரவையில் மாற்றம் செய்யவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மாற்றத்தின் போது, ஆளும் கட்சியிலிருக்கும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மூவருக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திசாநாயக்க, அநுர பிரியதர்சன யாப்பா மற்றும் டிலான் பெரேரா ஆகியோருக்கே அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!