இயக்கச்சியில் பற்றைக்குள் கைவிடப்பட்ட கார்! – தீவிர விசாரணை.

கிளிநொச்சி – இயக்கச்சிக்கு அண்மித்த பகுதியில் பற்றை ஒன்றுக்குள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் கார் தொடர்பாக படையினரும், பொலிஸாரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த காரில் யாரும் இல்லாத நிலையில், அது அங்கே எப்போது கொண்டு வரப்பட்டது?, அது யாருக்குச் சொந்தமானது?, அசம்பாவிதங்கள் ஏதாவது மேற்கொள்ளப்படப் போகிறதா? போன்ற கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

நேற்று கண்டுபிடிக்கப்பட்ட இந்த காரின் கதவுகள் நேற்று விசேட அதிரடிப்படையின் உதவியுடன் திறக்கப்பட்டு பரிசோதனையிடப்பட்டது. காரின் பல பாகங்கள் திருட்டு போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!