ஆலயங்களில் திருவிழாக்களுக்கு தடை!

கொரோனா தொற்றை அடுத்து இந்து ஆலயங்களில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆலயங்களில் வழமையான பூசை, தனிநபர் வழிபாடுகள் தவிர்ந்த எந்தவித கூட்டுச் செயற்பாடுகளையோ, ஒன்றுகூடல்களையோ அனுமதிக்கக் கூடாது என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆலயங்கள் மற்றும் அதன் வளாகங்களில் சமூக இடைவெளியைப் பேணி, ஒன்றுகூடக் கூடியவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 50ஆக வரை யறுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!