தம்புள்ள சந்தையும் 3 நாட்களுக்கு பூட்டு!

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மூன்று நாட்களுக்கு மூடத் தீர்மானித்துள்ளதாக தம்புள்ள மேயர் தெரிவித்துள்ளார். இன்று தொடக்கம் எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்கு குறித்த பொருளாதார மத்திய நிலையம் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள், மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!