நாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல்!

நாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் உள்ள 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உக்கல கிராம உத்தியோகத்தர் பிரிவு, கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்விஸ் வத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, களுத்துறை மாவட்டத்தின் பாணந்துரை தெற்கு பொலிஸ் பிரிவின் பிங்வத்த நாரம்பிட்டிய பிங்வத்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பண்டாரகம பொலிஸ் பிரிவின் பண்டாரகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவும் உடன்அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!