கிளிநொச்சி சுகாதாரப் பணிமனை பணியாளருக்கும் தொற்று!

கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பணியாளர் அண்மையில் கொழும்பு மாவட்டத்திற்குச் சென்று திரும்பியிருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது தொற்று உறுதிசெய்யப்பட்டதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர், மருத்துவர் என்.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!