உடுப்பிட்டி முதியவரும் கொரோனாவுக்கு பலி! – யாழ்ப்பாணத்தில் 22 ஆவது மரணம்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா பாதிப்பினால் வடமராட்சி உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 88 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார். இவர் முதியவர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பயனளிக்காது இன்று பிற்பகல் 3 மணிக்கு அவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பும் காரணம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதியவரின் சடலம் இன்று யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட் -19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!