கட்டுப்பாடுகளை கண்காணிக்க 20 ஆயிரம் பொலிசார்!

பயணக் கட்டுப்பாடுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்த நாடு முழுவதும் 20 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்றிரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை நாட்டில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து எவரும் வீதியில் நடமாட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடுகள் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர். பயணக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை உரியவாறு நடைமுறைப்படுத்த நாட்டில் 20 ஆயிரம் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!