கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் மீது 19ஆம் , 20ஆம் திகதிகளில் விவாதம்!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்டமூலம், மே 19 மற்றும் 20 திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைக்குழு நேற்று கூடி அடுத்த வாரம் நாடாளுமன்ற கூட்டங்களை மே மாதம் 18, 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் நடத்த முடிவு செய்தது.

கொரோனா தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களால் பின்பற்றப்பட்டு நாடாளுமன்றத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

மேலும், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்டமூலம் மே 19, 20 திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, இந்த யோசனை 19 ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். அது 20ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை தொடரும் என்றும் நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!