உயிராபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவும்

பொருளாதாரத்துடன் ஒப்பிடாது மக்களின் உயிரை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்

கொரோனா தொற்று காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுகின்ற உயிராபத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

எதிர்வரும் இரு வாரங்களில் கொரோனா தொற்று அதி வேகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் கொழும்பு கிளையும், அரசாங்க வைத்திய நிபுணர்களின் சங்கமும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்

அரசாங்கம் குறித்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு மக்களின் வாழ்க்கை பாதுகாப்பிற்காக செயற்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!