யாழ். மயிலங்காடு பகுதியில் சடலமொன்று மீட்பு

யாழ்ப்பாணம் – மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்று (20) காலை 6.30 மணியளவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!