பயணத்தடையை நீடிப்பதா இல்லையா தீர்மானிக்கப்படும் திகதி அறிவிப்பு

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டினை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமையே (28) தீர்மானிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

பிரபர ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனை தெரிவித்தார்.

அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையை மையப்படுத்தி பல்வேறு நிபுணர்கள் பயணத்தடை விதிப்பது தொடர்பில் பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு நடைமுறையின் சாதக மற்றும் பாதகங்களை மையப்படுத்தி அடுத்த வாரம் பயணத்தடையை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!