வடக்கில் நேற்றும் 50 பேருக்கு தொற்று!

வடக்கில் 50 பேர் நேற்று கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று 436 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், 50 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்களில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 41 பேரும், மன்னாரில், 2 பேரும், முல்லைத்தீவில் ஒருவரும், கிளிநொச்சியில் 2 பேரும், வ்வுனியாவில் 3 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில், பளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர், சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 9 பேர், சாவகச்சேரி மருத்துவமனையில் ஒருவர், மானிப்பாய் மருத்துவமனையில் பத்து பேர், காரை நகர் மருத்துவமனையில் 7 பேர், யாழ். போதனா மருத்தவமனையிர் 2 பேர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 5 பேர், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், 6 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!