திருகோணமலை வைத்தியசாலைக்கு பிசிஆர் இயந்திரம்!

திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கு கோவிட் தொற்றாளர்களை பரிசோதனை செய்யும் இயந்திரம் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் சிரமப் படுவதாகவும், அதன் தேவை கருதி பிரதமரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், அது தொடர்பான மரணங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றன.

கோவிட் தொற்றாளர்களை பரிசோதனை செய்வதற்கு பி.சி.ஆர் இயந்திரம் வைத்தியசாலையில் இல்லாத நிலையில் தொற்றாளர்களை பரிசோதனை செய்வதற்கு மட்டக்களப்பு மற்றும் கொழும்பு போன்ற தூர இடங்களுக்கு அனுப்பி வைப்பதனால் காலதாமதமும் சிரமங்களையும் எதிர்நோக்கி வருவதாக இரா,சம்பந்தன் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த உபகரணத்தை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை தாம் மேற்கொள்வதாக பிரதமர் தம்மிடம் வாக்குறுதி அளித்தாக இரா,சம்பந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!