மேலும் 45 பேர் கொரோனாவுக்குப் பலி!

இலங்கையில் நேற்றுமுன்தினம் கொரோனா தொற்றால் மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,814 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்று இதுவரை 1,917 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 248,026 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!