நேற்றைய தினம் 1876 பேருக்கு கொரோனா

நாட்டில் ஆயிரத்து 876 பேருக்கு நேற்றைய நாளில் கொரோனாதொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இதன்படி, நாட்டில் இதுவரை தொற்றுறுதி செய்யப்பட்டுள்ள தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 49 ஆயிரத்து 926 ஆக காணப்படுகின்றது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஆயிரத்து 843 பேர் முழுமையாகமாக குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 14 ஆயிரத்து 668 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 32 ஆயிரத்து 444 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 862ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!