புதிய சுகாதார வழிகாட்டல் கோவை விரைவில் வெளியிடப்படும்

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய புதிய சுகாதார விதிமுறைகள் தொடர்பான வழிகாட்டல்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படவுள்ளன.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தற்போதைய நிலையினை ஆய்வு செய்து பின்பற்றப்பட வேண்டிய சுகாதர வழிகாட்டல்கள் இவ்வாறு வெளியிடப்படவுள்ளதாக மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தம்மிக்க ஜயலத் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழு நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஆய்வுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மேல் மாகாணம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார விதிமுறைகள் குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மே மாதம் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள் தற்போது நடைமுறையில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!