டெல்ட்டா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படுகின்றது

நாட்டில் டெல்டா தொற்றின் அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் , விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, தற்போது நடைமுறையில் காணப்படும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

அத்துடன் இதுவரை 05 பேருக்கு டெல்டா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த

தொற்று மேலும் பரவலடைவதை தடுப்பதறகு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நாளை (04) முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இது தொடர்பில் இதுவரை எந்தவித இறுதித் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!