ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட இந்த அரசாங்கம் ஆட்சியில் இருப்பதற்கு காரணமே பசில் ராஜபக்ச

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தற்பொழுது ஆட்சியில் இருப்பதற்கு காரணமே பசில் ராஜபக்ச என ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

எனவே பசில் ராஜபக்சவிற்கு உயர் பதவியொன்று வழங்கப்படுவது மிகவும் நியாயமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பசில் ராஜபக்சவிற்கு நிச்சயமாக உயர் பதவியொன்று வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் உதயங்க வீரதுங்க முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!