ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் இல்லை – அமைச்சர் நாமல் ராஜபக்ச

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் தனக்கில்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ச, தனக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.

தனக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

மகிந்த ராஜபக்சவின் அரசியல் பயணத்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு பொறுமையாக செயற்பட்டு, விரிவான அனுபவங்களுடன் முன்நோக்கி செல்வது தனது நோக்கம் எனவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!