அரசாங்கத்திற்கு எதிராக விரைவில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

மாகாண பாடசாலைகளை மத்திய அரசின் ஆளுகைக்கு உட்படுத்துவதற்கு எதிராக வெகு விரைவில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தற்போதுள்ள அரசாங்கம் மாகாணங்களுக்கு உரித்தான கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களுக்கான மாகாண அதிகாரங்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

அதற்கு சிலர் துணைபோகின்றார். சில மாயைகளை நம்பி சிலர் மாகாண அதிகாரத்தை மத்திக்கு தாரைவார்க்கும் முகமாக செயற்படுகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!