நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் தளர்வு

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வடமராட்சி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் இன்று காலை 6 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் ராணுவத் தளபதி குறித்த அறிவிப்பினை விடுத்துள்ளார்

இந்த நிலையில் நாட்டின் அனைத்து பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!