இதுவரை 473 கடல் உயிரினங்கள் மரணம்!

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளால் 473 கடல் உயிரினங்கள் உயிரிழந்துள்ளன என்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். இதுவரையில் 417 ஆமைகளும், 48 டொல்பின்களும், 8 திமிங்கிலங்களும் உயிரிழந்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!