இலங்கையில் நேற்று செலுத்தப்பட்ட அதிகளவான கொரோனா தடுப்பூசிகள்

இலங்கையில் கொரோனாவுக்கு எதிராக நேற்று 300,000 இரண்டாவது அளவுசினோபார்ம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

அதன்படி, நேற்று மட்டும் மொத்தம் 490,805 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அவர்களில், 307,267 பேர் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது அளவைப் பெற்றனர்.

அதே நேரத்தில் 153,958 பேருக்கு சினோஃபார்ம் முதல் அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டது இது தவிர, 25,576 பேர் எஸ்ட்ராசெனெகா முதல் அளவையும் 3,620 பேர் இரண்டாவது அளவையும் பெற்றனர்.

மேலும், ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது அளவும் 384 பேருக்கு நேற்று வழங்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!