யாழ்ப்பாணத்தில் வேகமாக உயரும் கொரோனா மரணங்கள்!

யாழ்ப்பாணத்தில் நேற்று மேலும் 5 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதடியைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்புத் துறையைச் சேர்ந்த 79 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூரைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும் கோண்டாவிலைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரும் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176ஆக உயர்வடைந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!