சுயமுடக்கம் ஆபத்தானது!

ஒரு சில பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் சுயமாகவே வர்த்தக நிலையங்களை மூடியுள்ளனர். இதனால் நுகர்வோர் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வேறு பகுதிகளில் உள்ள நகரங்களுக்கு செல்கிறார்கள். ஆகவே வர்த்தக நிலையங்களை சுயமாக மூடுவதால் எவ்வித பயனும் கிடையாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தற்போதைய நிலையினை கருத்திற் கொண்டு வர்த்தகர்கள் தங்களின் வர்த்தக நிலையங்களை சுயமாக மூடியுள்ளமை வரவேற்கத்தக்கது. சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவது அவசியமாகும்.

சிறு வியாபார நடவடிக்கைகளின் ஊடாக தங்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்லும் மக்கள் குறித்தும் சிந்தித்து செயற்பட வேண்டும்.

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். புதிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டலில் அடிப்படையில் பொது மக்கள் செயற்பட வேண்டும்.

வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் செல்ல முடியும். எனினும் தொழில் மற்றும் அத்தியாவசிய சேவைக்காக வெளியில் செல்லும் போது ஒருவர் என்ற அறிவுறுத்தல் தாக்கம் செலுத்தாது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!