யாழ்ப்பாணத்தில் 64 பேர் உள்ளிட்ட வடக்கில் 114 பேருக்கு தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 114 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 687 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 64 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 23 பேருக்கும், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 16 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 06 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் 02 பேருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவரும், இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவரும், பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!