இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவர்கள்: இந்திய ராணுவம் செய்த செயல்!

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லையான கிருஷ்ணா காதி செக்டார் பகுதியில் கடந்த 18-ந்தேதி பிற்பகலில் இந்திய ராணுவ வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த 4 சிறுவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததை வீரர்கள் கண்டுபிடித்தனர்.

உடனே அவர்களை ராணுவம் சுற்றி வளைத்தது. இதைப்பார்த்ததும் ஒரு சிறுவன் மீண்டும் தாங்கள் வந்த பகுதிக்கே திரும்பி சென்றான். ஆனால் மீதமுள்ள 3 பேரை ராணுவம் பிடித்து விசாரித்தது.அப்போது அவர்கள் மீன் பிடித்துக்கொண்டு திரும்பியபோது தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் கனிவாக நடந்து கொண்ட ராணுவம், அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை கொடுத்து முகாமில் வைத்துள்ளது.

தவறுதலாக எல்லை தாண்டி வந்துள்ள அவர்கள் திரும்ப ஒப்படைக்கப்படுவார்கள் என ராணுவம் தெரிவித்து உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!