உச்சத்தை தொட்டது உயிரிழப்பு! – நேற்று முன்தினம் 209 பேர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 209 உயிரிழப்புகள் நேற்றுமுன்தினம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். கொரோனா பரவல் ஆரம்பித்ததிலிருந்து முதற் தடவையாக நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் தொடர்பிலான உயிரிழப்புகள் 200ஐத் தாண்டியுள்ளது.

இதனுடன் இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 8,000ஐத் தாண்டி, 8,157ஆக உயர்ந்துள்ளது.

குறித்த உயிரிழந்தவர்களில் 108 ஆண்களும், 101 பெண்களும் என்ற நிலையில், எவரும் 30 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் இல்லை. 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டோர் 46 பேர் என்பதுடன், மிகுதியான 60 மற்றும் அதற்கு மேற்பட்டோர் 163 பேர் ஆவர்.

அதேவேளை, நேற்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 4,602ஆக உயர்ந்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கையானது 412,370ஆக உயர்ந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!