சுகாதார விதிமுறையினை மீறி செயற்படும் பஸ்களின் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை

ஆசன எண்ணிக்கையினை விட அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் உரிமங்களை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதன்படி எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்

இதேவேளை இவ்வாறு பஸ்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதுடன் மறு அறிவித்தல் வரை குறித்த பஸ்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

மேலும் இந்த விடயத்தை பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துமூலம் அறிவிக்கவுள்ளதாகவும் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!