யாழ் பல்கலைக்கழத்தின் 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா – இரண்டாவது அமர்வு நாளை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு நாளை இணையவழியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்தள்ளதாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த மாதம் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா அச்ச நிலைமை காரணமாக பட்டமளிப்பு விழாவில் அதிக அளவானோர் ஒன்றுகூட அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இணைய வழியில் குறித்த நிகழ்வை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை இணையவழியில் இரண்டு பகுதிகளாக முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நிகழ்வை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பேஸ்புக் மற்றும் யூடியுப் பக்கங்களின் ஊடாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பட்டம் பெறுபவர்களுக்கு நேரலைக்கான இணைப்புகள் தனித்தனியாக மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாடு வழமை நிலைக்குத் திரும்பிய பின்னர் மாணவர்களுக்கான சம்பிரதாய பூர்வ பட்டமளிப்பு விழா நடாத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!