ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பலவீனமான அரச தலைவர்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பலவீனமான அரசதலைவர் என்று தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின தலைவரும்,அபயராம விகாரையின் விகாராதிபதியுமான முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கம் நாட்டை முன்னேற்றுகிறதா, அழிக்கிறதா என்று எண்ண தோன்றுகிறது. ஆளும்தரப்பின் உறுப்பினர்கள் அவர்களுக்குள் முரண்பட்டுக் கொள்கிறார்கள். குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்பட்ட அரச தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருதப்படுகிறார்.
நாட்டு மக்கள் எம்மிடம் ‘தெங் செபத ‘என்று நகைச்சுவையாக கேட்கிறார்கள். மக்களின் விமர்சனங்களுக்கு இன்று உள்ளாகியுள்ளோம். கொவிட் தாக்கம் மாத்திரம் இல்லாமிருந்தால் மக்கள் எந்நாளும் வீதிக்கிறங்கி போராடுவார்கள்.

விவசாயிகள் உரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள போது பொலன்னறுவை மாவட்டத்தில் பராக்கிரம சமுத்திரத்தை அண்மித்து பல பில்லியன் செலவில் நடைபாதை நிர்மானிக்கப்படுகிறது.
இதன் பயன்யாருக்கு இவ்விடயத்தில் அரசியல்வாதிகள் பௌத்த மத தலைவர்களையும் பிறிக்கிறார்கள். அத்துடன் நாட்டையும் பிரிக்கிறார்கள்,இனங்களையும் பிரிக்கிறார்கள்.நாட்டை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!