இலங்கையில் மாடுகளை அறுப்பதை தடை செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல்

இலங்கையில் உள்ளூர் பால் தொழில் துறையை அதிகரிப்பதற்காக மாடுகளை அறுப்பதை தடை செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.

தகவல்துறை அமைச்சில் இன்றைய தினம் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான யோசனைகள், அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணாக இல்லை என்று சட்டமா அதிபர் சான்றளித்துள்ளார்.

இந்த நிலையில் பிரதமரால் தாக்கல் செய்யப்பட்ட ஒருங்கிணைந்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!