தந்தையிடம் 6 வயது சிறுவன் கூறிய வார்த்தை: சொன்ன சில மணிநேரத்தில் பிரிந்த உயிர்!

தமிழகத்தில் கொடிய விஷம் கொண்ட நல்லபாம்பு கடித்ததில் 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். படப்பை அடுத்த நடரசன்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. கூலி தொழிலாளி. இவருக்கு சச்சின் (6), விக்கேஷ் (3) என இரண்டு பிள்ளைகள் இருந்தனர். ராமு வீட்டின் அருகே நல்லபாம்பு ஒன்று அடிக்கடி சுற்றித் திரிந்து வந்ததாக தெரிகிறது.
   
இந்நிலையில், நேற்று சச்சின் மற்றும் விக்னேஷ் வீட்டு அருகில் உள்ள வயல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக நல்லபாம்பு சச்சினை கடித்துள்ளது.
இதையடுத்து சச்சின் தனது தந்தையிடம் சென்று, அப்பா என்னை பாம்பு கடிச்சிடுச்சு என கூற ராமு அதிர்ச்சியடைந்தார். பின்னர் ராமு மற்றும் உறவினர்கள் சச்சினை உடனடியாக பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அக்கம்பக்கத்தினர் சச்சினை கடித்த பாம்பை அடித்து கொன்றனர். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சச்சின் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் சச்சினின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!