கஜேந்திரனால் ஆபத்து இல்லை! October 26, 2021 7:48 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கொரோனா தொற்றுக்குள்ளான, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், இரண்டு நாட்களாக பாராளுமன்றத்துக்கு சமுகமளித்திருந்ததாகவும் அங்குள்ள சில இடங்களுக்கு அவர் சென்றுள்ளதாகவும் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.எனினும், அவர் முகக்கவசம் அணிந்து சரியான சுகாதார சட்டங்களை பின்பற்றியதால், பாராளுமன்றத்துக்கு அவர் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.பாராளுமன்றத்தில் இருந்த நேரத்தில் ஒரு சில தமிழ் எம்.பிக்களுடன் மட்டுமே தொடர்பு வைத்திருந்ததாக பாராளுமன்ற பொலிஸார் தெரிவித்துள்ளனர்.2 தடுப்பூசிகளையும் பெற்றுள்ள அவருக்கு, கொரோனா தொற்று இருப்பது கடந்த 24 ஆம் திகதி கண்டறியப்பட்டமை, குறிப்பிடத்தக்கது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…