பிரான்சில் பயங்கரம்: மருத்துவமனை வாசலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்!

பிரான்சில் மருத்துவமனை வாசல் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் Pyrénées-Orientales-வில் உள்ள Perpignan மருத்துவமனை வாசலில் நேற்று அதிகாலை 30 வயது மதிக்கத்தக்க நபர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் சடலத்தை மீட்டு, பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட நபர் ஒரு வீடற்றவர் என்பதும், மொரோக்கா நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவ தினத்தன்று மற்றொரு வீடற்ற நபர் இவரின் சடலத்தை பார்த்த பின்னரே, அவர் கொடுத்த தகவலின் பேரிலே சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பொலிசார் கூறியுள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!