மெக்சிகோவில் பயங்கரம்: சுங்கச்சாவடி மீது மோதிய சரக்கு வாகனம்: 19 பேர் பலி! November 8, 2021 8:12 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest மெக்சிகோவின் நகர் பகுதியை பியூப்லா மாநிலத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனத்தின் பிரேக்குகள் திடீரென செயலிழந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் அருகில் இருந்த சுங்கச்சாவடியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுங்கச்சாவடியின் அருகில் இருந்த கார்கள் தீப்பிடித்து எரிந்தது. விபத்தால் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இந்த பயங்கர விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…