குறிஞ்சிக்கேணி பகுதியில் மோட்டார் இழுவைப் படகு விபத்து – ஆறு பேர் உயிரிழப்பு

கிண்ணியா – குறிஞ்சிக்கேணி பகுதியில் மோட்டார் இழுவைப் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிண்ணியா – குறிஞ்சிக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், ஆற்றினை கடப்பதற்காக படகொன்றில் பயணித்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!