தவறை ஏற்றுக் கொண்டார் சிறிதரன்! November 25, 2021 10:02 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என, அந்த அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்த தாமும் கோரவில்லை என தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், இந்தத் தவறை பகிரங்கமாக ஏற்றுகொள்கிறோம் எனவும் அறிவித்தார்.2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,“வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தேர்தல் திருத்தம் வரும்வரை அல்லது அரசியலமைப்பில் திருத்தம் வரும்வரை மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாது என கூறியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.“நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாணசபை தேர்தல் நடத்தப்படவில்லை. அந்த அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்துவந்த நாமும் அதனை வலியுறுத்தவில்லை என்பதை பகிரங்கமாக ஏற்றுகொள்கிறேன். இந்த தவறை ஏற்றுகொள்கிறோம்.நல்லாட்சி அரசாங்கம் செய்த தவறை இந்த அரசாங்கமும் செய்யப்போகிறதா? ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று இரு வருடங்களும், பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று ஒரு வருடங்களும் கடந்துள்ளன.இவ்வாறான நிலையில் கடந்த அரசாங்கம் செய்த தவறை விடுத்து மாகாணசபை தேர்தலை இந்த அரசாங்கம் நடத்த முன்வர வேண்டும்“ என்றார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…