கடலில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி மரணம்! December 4, 2021 7:49 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest திருகோணமலை – ஈச்சிலம்பற்று வாழைத்தோட்டம் பகுதியில் நேற்றுமாலை கடலில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்த சிறுவர்கள் திருகோணமலை -மாவடிச்சேனை,வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த யோகேந்திர ராசா லக்ஸன் (14 வயது) , தினேஷ் காந்தன் இம்ரோஜன் (12 வயது) எனவும் தெரிவித்துள்ளனர்.ஆறு சிறுவர்கள் ஒன்றிணைந்து வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள கடலில் குளிப்பதற்காக சென்ற போது இரண்டு சிறார்கள் நீரில் மூழ்கியதாகவும், இதனை அடுத்து மற்றைய சிறுவர்கள் வீட்டுக்கு வந்து குறித்த இரண்டு சிறார்களும் நீரில் மூழ்கியதாக தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த மக்கள் இரண்டு சடலங்களையும் மீட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.உயிரிழந்த இருவரின் சடலங்களும் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு , பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…