ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தளபதி உள்பட 11 பேர் பலி!

இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி உள்பட 11 பேர் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உறுதிப்படுத்தப்படவில்லை. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்று பிற்பகலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்ற வேளையில் ஹெலிகாப்டர் பெரும் விபத்துக்குள்ளாகியது.

ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்து கொண்டு இருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
குறித்த ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத் இராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள் உட்பட 14 பேர் பயணம் செய்ததாகவும் அதில் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் சற்று முன் தகவல் கிடைத்துள்ளது.

விபத்துக்குள்ளான இடத்தில் மீட்கப்பட்ட ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தோருக்கு சிகிச்சை தர சிறப்புக்குழு நீலகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!