பாகிஸ்தானில் நடந்தது போல தமிழர்களுக்கும் நடந்தது!

பாகிஸ்தானில் நடந்ததுபோல் இலங்கையிலும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதுவும் அரச அனுசரணையில்கூட தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ளன” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை நாம் கண்டிக்கின்றோம். தோழர் பிரியந்த குமாரவின் குடும்பத்தாருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பாகிஸ்தானில் நடந்த சம்பவத்தை இலங்கையிலுள்ள இளைஞர்கள் கண்டிக்கின்றனர். அனுதாபம் தெரிவிக்கின்றனர். இலங்கையிலும் இப்படியான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
1956, 1958 காலப்பகுதியில் அரச அனுசரணையுடன் தமிழர்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றன. தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். கறுப்பு ஜுலையின்போதும் தமிழ் இளைஞர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அவை தொடர்பான படங்களும் உள்ளன. இந்தக் கொடூர சம்பவங்களை நாம் மறக்கவேமாட்டோம்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!