மக்கள் ஆணை வழங்கிய விடயங்களுக்கே தமிழரசு கையெழுத்திடும்! – அரசியல் குழு கூட்டத்தில் முடிவு. December 21, 2021 10:28 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கொழும்பில் இன்று முற்பகல் கூடும் தமிழ் பேசும் மக்களின் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்குபற்றும் என்றும், ஆனால் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகப் பல்வேறு தேர்தல்களில் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் ஊடாகத் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற விடயங்களுக்கு உட்பட்டதான ஆவணங்களில் மட்டுமே கையெழுத்திரும், என்றும், கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நேற்று காலையும் மாலையும் இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது.கொழும்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியின் இல்லத்தில் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முதல் அமர்வு இடம்பெற்றது.மாலை அமர்வு மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இரா.சம்பந்தன், ப.சத்தியலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, கி.துரைராஜசிங்கம், த.கலையரசன் மற்றும் குலநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர். மட்டக்களப்பிலிருந்து கொழும்பு வராமையால் பொன். செல்வராசா இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவில்லை.தமிழரசுக் கட்சியின் நேற்றைய அரசியல் குழுக் கூட்டத்தில், இன்ற நடைபெறும் தமிழ்க் கட்சிகளின் கூட்டம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சம்பந்தனோடு சுமந்திரனும் பங்குபற்ற வேண்டும் என அரசியல் குழுவின் அனைத்து அங்கத்தவர்களும் வலியுறுத்தினர்.சுமந்திரனுடன் தான் மேற்படி கூட்டத்தில் பங்குபற்றுதாக, ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்கனவே அறிவித்து விட்டதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார்.போரின் பின்னர் கடந்த பன்னிரண்டு வருட காலத்தில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் கூட்டமைப்பாக தமிழரசின் நிலைப்பாடு தேர்தல் விஞ்ஞாபனங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கே நமது தமிழ் மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் ஆணை தந்துள்ளனர்.அந்த ஆணையைப் பிரதிபலிக்கும் விதத்தில் இன்றைய தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் ஆவணம் தயாரிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அதில் தமிழரசுப் பிரதிநிதிகளான மாவை சேனாதிராஜாவும் மற்றும் சம்பந்தனும் கையெழுத்திட வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மக்களிடம் தமிழரசுக் கட்சித் தேர்தல் விஞ்ஞாபனங்கள் மூலம் பெற்ற ஆணைக்கு அமைவாக அந்த ஆவணத்தை ஒழுங்குபடுத்துவதை சுமந்திரன் விசேடமாகக் கவனிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…