மக்கள் மீது மேலதிக சுமை வேண்டாம் – எதிர்கட்சி விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையில் அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களின் விலையை குறைக்குமாறு எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்

இந்த எரிபொருள் விலையேற்றத்தினால், மக்களுக்கு மேலும் பொருளாதார சுமைகள் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரசாங்கம் உரிய தீர்மானங்களை எடுத்திருந்தால், மக்கள் தற்போதைய பிரச்சினைகளுக்குள் ஆட்பட்டிருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!