1500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அவற்றில் அரிசி மூடைகள் ஏற்றப்பட்டிருக்கும் சுமார் 500 கொள்கலன்கள் உள்ளனவென இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
    
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா, நாட்டரிசி மற்றும் பச்சரிசி போன்றவை அவற்றில் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார். அவற்றில் ஒருசில கொள்கலன்களே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளன என்றும் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!