திருகோணமலை எண்ணெய்த்தாங்கி ஒப்பந்தம் அடுத்த வாரத்திற்குள் கைச்சாத்து January 4, 2022 9:58 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக Trinco Petroleum Terminal Ltd எனும் நிறுவனத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து Trinco Petroleum Terminal Ltd என்ற பெயரில் புதிய நிறுவனம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.இதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 24 தாங்கிகளும், வர்த்தக நோக்கத்திற்காக IOC நிறுவனத்திற்கு 14 தாங்கிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.எஞ்சியுள்ள 61 தாங்கிகளில் 51 வீதம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினாலும், 49 வீதம் IOC நிறுவனத்தினாலும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.இந்த நிலையில், இது தொடர்பான ஒப்பந்தம் அடுத்த வாரத்திற்குள் கைச்சாத்திடப்படுமென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…