வெடித்துச் சிதறப் போகிறது அரசாங்கம்!

இந்த வருட இறுதிக்குள் அரசாங்கம் வெடித்துச் சிதறப் போகிறது என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
    
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கம் வெடித்தாலும் மக்களைக் காக்கும் தலைமைத்துவம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கட்சி என்ற ரீதியில் பல் வேறுசவால்களை எதிர்கொண்டோம். தற்போது கட்சியை பலப்படுத்த பல கட்சிகள் எமக்கு ஆதரவளித்து வருகின்றன என்று தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு இது ஒரு முக்கியமான ஆண்டாகும் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!