பட்டித்திடலில் டிப்பர் – பஸ் விபத்து! – 27 பேர் படுகாயம். January 10, 2022 2:19 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest திருகோணமலை – மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் இன்று காலை 7.35 மணியளவில் மூதூர் -மட்டக்களப்பு பிரதான வீதியின் பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அம்பாறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பயணிகள் பஸ் ஒன்றும் கன ரக வாகனமும் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.இதனால் இரண்டு வாகனங்களினதும் சாரதிகள் உள்ளடங்கலாக மொத்தம் 27 பேர் காயமடைந்துள்ள நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…